கர்நாடகாவில் பரபரப்பு.! 7வயது மகனை சுத்தியால் தாக்கி கொன்றுவிட்டு தந்தை தற்கொலை.! - Seithipunal
Seithipunal


கர்நாடகா மாநிலத்தில் சுத்தியால் தாக்கி 7 வயது மகனை கொன்றுவிட்டு தந்தை தற்கொலை செய்து கொண்டு சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடகா மாநிலம் தார்வார் மாவட்டம் சுள்ளா பகுதியை சேர்ந்தவர் விவசாயி பக்கீரப்பா(38). இவருடைய மனைவி முதகவ்வா(32). இவர்களுக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் கணவன்-மனைவியிடையே அடிக்கடி குடும்ப பிரச்சினை காரணமாக தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

இதையடுத்து நேற்று இவர்கள் இடையே தகராறு ஏற்பட்ட நிலையில் ஆத்திரமடைந்த கணவர் பக்கீரப்பா, வீட்டில் இருந்த சுத்தியால் மனைவி மற்றும் மகன் ஓம் ஶ்ரீயாஸ்(7) உட்பட அனைவரையும் சரமாரியாக சுத்தியால் தாக்கியுள்ளார். இதில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக மகன் ஓம் ஶ்ரீயாஸ் உயிரிழந்தான்.

மேலும் அவரது இறந்து குழந்தைகள் மற்றும் மனைவி பலத்த காயமடைந்தனர். இந்நிலையில் பக்கீரப்பா தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதையடுத்து அக்கம் பக்கத்தினர் சந்தேகம் அடைந்து அவரது வீட்டிற்கு சென்று பார்த்தபோது, மூன்று பேர் பலத்த காயமடைந்த நிலையில், ஓம் ஶ்ரீயாஸ் பிணமாக கிடந்துள்ளான். மேலும் பக்கீரப்பா தூக்கில் பிணமாக தொங்கியுள்ளார்.

இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர்கள் இதுகுறித்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். இந்த தகவலை எடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் பலத்த காயமடைந்த மூன்று பேரையும் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் உயிரிழந்த மகன் மற்றும் தந்தையை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து இந்த சம்பவம் குறித்து உப்பள்ளி புறநகர் போலீசார், வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Father commits suicide after murder son with hammer in Karnataka


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->