கர்நாடகா : ஒரே மரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட தந்தை-மகன்.!! - Seithipunal
Seithipunal


கர்நாடகா மாநிலத்தில் கடன் பிரச்சனையால் ஒரே மரத்தில் தந்தையும், மகனும் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

கர்நாடக மாநிலம் தார்வார் மாவட்டத்தில் உள்ள குந்துகோல் நகர் பகுதியை சேர்ந்தவர் சிவனகவுடா லிங்கப்பா(60). இவரது மகன் அனில் சிவனகவுடா(30). இவர்கள் இருவரும் தங்களுக்கு சொந்தமான விவசாய நிலத்தில் விவசாயம் செய்வதற்காக ரூபாய் ஒன்பது லட்சம் பல்வேறு வங்கிகளில் கடன் வாங்கியுள்ளனர்.

ஆனால் நான்கு வருடங்களாக சரியான விளைச்சல் கிடைக்காததால் பெருமளவில் இவர்களுக்கு நஷ்டம் ஏற்பட்டு, கடனை திருப்ப செலுத்த முடியாமல் சிரமப்பட்டுள்ளனர். இதனால் வங்கியில் இருந்து கடனை திருப்பி செலுத்த நோட்டீஸ் வந்ததால் இவர்கள் இரண்டு பேரும் மன வேதனையில் இருந்து வந்துள்ளனர்.

இதையடுத்து இவர்கள் இரண்டு பேரும் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்து, நேற்று முன்தினம் தங்களது விவசாய நிலத்தில் உள்ள ஒரே மரத்தில் இருவரும் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இதைத்தொடர்ந்து இந்த சம்பவம் குறித்த தகவல் அறிந்து வந்த போலீசார் இரண்டு பேரின் உடல்களை கைப்பற்றி பிரயோக பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தியதில் கடன் பிரச்சனையால் தந்தையும், மகனும் தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்துள்ளது. இதைத்தொடர்ந்து போலீசார் மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Father and son committed suicide by hanging themselves from the same tree in Karnataka


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->