இந்தியாவையே அதிரவைத்த EX.எம்.பி கொலை வழக்கு.. பிரேத பரிசோதனை அதிர்ச்சி ரிப்போர்ட்.!
famous rowdy adhik ahmed and his brother ashraf ahmed shot to dead by unidentified man
உத்திர பிரதேசம் மாநிலத்தைச் சார்ந்த பிரபல ரவுடி ஆதிக் அகமது மற்றும் அவரது சகோதரர் அசரப் அகமது ஆகியோர் மர்ம நபர்களால் சுட்டுக் கொலை செய்யப்பட்ட சம்பவம் உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
உத்திர பிரதேசம் மாநிலத்தைச் சார்ந்த பிரபல ரவுடியான ஆதிக் அகமது அவரது சகோதரர் அசரப் அகமது உடல் மருத்துவ பரிசோதனைகளை முடித்து விட்டு வெளியே வரும்போது மருத்துவமனை வாயிலில் வைத்து மர்ம நபர்களால் சுட்டுக் கொலை செய்யப்பட்டார். இச்சம்பவம் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியது.
இந்தக் கொலை சம்பவம் தொடர்பாக நீதி விசாரணைக்காக வேண்டி அவர்களது இருவரது உடலும் பிரேத பரிசோதனை செய்தபோது வீடியோ எடுக்கப்பட்டது. அப்போது ஆதிக் அகமது உடம்பில் ஒன்பது குண்டுகள் பாய்ந்து இருப்பதும் அவரது சகோதரர் அசரப் அகமது உடம்பில் ஐந்து குண்டுகள் பாய்ந்து இருப்பதும் தெரிய வந்தது.
அதிப் அஹமதிற்கு 1 குண்டு நெஞ்சிலும் மற்ற எட்டு குண்டுகள் முதுகிலும் பாயீந்திருக்கிறது. அவரது சகோதரர் அசரப் அகமதிற்கு ஒரு குண்டு முகத்திலும் நான்கு குண்டுகள் நெஞ்சிலும் பாய்ந்து இருக்கிறது. சில தினங்களுக்கு முன் இவரது மகன் போலீசாரால் என்கவுண்டர் செய்யப்பட்ட நிலையில் தற்போது ஆதிக் அகமதுவும் அவரது சகோதரர் அசரப் அகமதுவும் கொல்லப்பட்ட சம்பவம் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.
English Summary
famous rowdy adhik ahmed and his brother ashraf ahmed shot to dead by unidentified man