கள்ள உறவால் 'குடும்ப அவமானம்'...! இளம்பெண்ணை விஷம் கொடுத்து கொன்ற உறவினர்கள்! நடந்தது என்ன...?
Family disgrace due fake relationship Relatives poisoned and killed young woman What happened
கர்நாடக மாநிலம் பெலகாவி மாவட்டம் யமகனமரடி பகுதியை பதறவைத்த கொடூரமான குடும்பக் கொலை சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அப்பகுதியைச் சேர்ந்த சத்யவ்வா சந்தோஷ் ஹெலவி (24), திருமணமான இளம்பெண். குடும்ப வாழ்க்கையில் இருந்தபோதும், அவருக்கு ஒரு இளைஞருடன் ஏற்பட்ட நெருக்கம் பின்னர் கள்ள உறவாக மாறியதாக தெரிவிக்கப்படுகிறது. இதனால் இருவரும் ரகசியமாக சந்தித்து வந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.

இந்த உறவு காரணமாக, சத்யவ்வா தனது கணவரை விட்டு விட்டு கள்ளக்காதலனுடன் வீட்டை விட்டு சென்றது குடும்பத்தினருக்கு கடும் அதிர்ச்சியையும் அவமான உணர்வையும் ஏற்படுத்தியதாக தெரிவிக்கப்படுகிறது.
இதனால் கோபம் கட்டுக்கடங்காமல், அவரை உயிருடன் விடக்கூடாது என்ற கொடூர முடிவுக்கு குடும்பத்தினர் வந்ததாக தகவல்கள் வெளிவந்துள்ளன.இதனைத் தொடர்ந்து, சத்யவ்வாவின் இருப்பிடத்தை கண்டறிந்த அவர்கள், “சமாதானமாக பேசுவோம்” என நம்ப வைத்து அவரை மீண்டும் வீட்டிற்கு அழைத்து வந்துள்ளனர்.
ஆனால் அது முன்கூட்டியே தீட்டப்பட்ட திட்டம் என பின்னர் தெரியவந்தது. வீட்டில் வைத்து, அவரது அண்ணன் ஷானூர் சதாசிவா ஹெலவர் (35), உறவினர்கள் பிரகாஷ் பீமப்பா (46), கல்லப்பா மாயப்பா (40) ஆகியோருடன் சேர்ந்து, சத்யவ்வாவின் வாயில் வலுக்கட்டாயமாக விஷத்தை ஊற்றியதாக தெரிவிக்கப்படுகிறது.
விஷம் உடலில் பரவிய சில நிமிடங்களிலேயே, துடித்துக்கொண்டிருந்த சத்யவ்வா பரிதாபமாக உயிரிழந்தார். அதற்குப் பின்னரும் குற்றத்தை மறைக்க அவர்கள் எடுத்த நடவடிக்கை மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சத்யவ்வாவின் உடலை இரவு நேரத்தில் யாருக்கும் தெரியாமல் மயானத்திற்கு கொண்டு சென்று அவசரமாக எரித்ததாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த கொடூர செயல் பின்னர் வெளிச்சத்துக்கு வந்ததைத் தொடர்ந்து, சத்யவ்வாவின் தாய் யமகனமரடி காவலர்களிடம் புகார் அளித்தார். அதன்பேரில் உடனடி நடவடிக்கை எடுத்த காவலர்கள், சம்பவத்தில் தொடர்புடைய ஷானூர் சதாசிவா உள்ளிட்ட மூவரையும் பிடித்து தீவிரமாக விசாரித்தனர்.
இந்த விசாரணையின் போது, “கள்ள உறவு காரணமாக ஏற்பட்ட அவமானம்” என்பதையே காரணமாகக் கூறி, விஷம் கொடுத்து கொலை செய்ததையும், பின்னர் உடலை எரித்ததையும் அவர்கள் ஒப்புக்கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.
இதனையடுத்து, மூவரையும் காவலர்கள் கைது செய்து, சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். குடும்ப மரியாதை என்ற பெயரில் நடந்த இந்த கொடூர செயல், அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் பதற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது என தெரிவிக்கப்படுகிறது.
English Summary
Family disgrace due fake relationship Relatives poisoned and killed young woman What happened