மத்திய அரசுடனான விவசாயிகளின் பேச்சுவார்த்தை தோல்வி.!!
Famers negotiation with Central govt failed
மத்திய அரசுடனான விவசாயிகளின் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்துள்ளது. மத்திய அரசு வாக்குறுதி அளித்தபடி 23 வகையான பயிர்களுக்கும் குறைந்தபட்ச ஆதரவு விலையை அமல்படுத்தினால் மட்டுமே போராட்டத்தை கைவிடுவோம் என்று விவசாயிகள் அமைப்புகள் மத்திய அரசை வலியுறுத்தியுள்ளனர்.
சண்டிகரில் மத்திய அமைச்சர்களுடன் நடந்த 4வது சுற்று பேச்சு வார்த்தைக்குப் பிறகு பருப்பு வகைகள், மக்காச்சோளம் மற்றும் பருத்தியை அரசு நிறுவனங்களால் MSP விலையில் வாங்கும் திட்டத்தை நிராகரிக்கும் முடிவை விவசாயிகள் சங்கத் தலைவர்கள் அறிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
English Summary
Famers negotiation with Central govt failed