இராணுவ வீரர் பெயரில் போலி கணக்கு மூலமாக பெண்களுக்கு தொல்லை.. ஆசாமி கைது.! - Seithipunal
Seithipunal


இராணுவ வீரர் என்று அடையப்படுத்தி பெண்களை ஏமாற்றிய போலி இராணுவ வீரர் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

டெல்லியில் உள்ள கிரேட்டர் கைலாஷ் பகுதியை சார்ந்தவர் திலிப் குமார். இவர் தன்னை இராணுவ வீரர் என்று அடையாளப்படுத்திக்கொண்டு, சமூக வலைத்தளங்களில் பதிவு செய்து வந்துள்ளார். மேலும், முகநூல் போன்ற சமூக வலைத்தளங்களில் தன்னை நல்லவர் என்ற போர்வையில் அடையாளப்படுத்தி இருக்கிறார். 

இராணுவம் ரீதியாகவும், பொதுப்பிரச்னைகள் ரீதியாகவும் இராணுவ வீரர் என்ற போர்வையில் அவர் பேசி வந்ததால், அவருக்கு பல பின்பற்றாளர்கள் கிடைத்துள்ளனர். இந்நிலையில், திலீப் குமார் பெண்களை குறிவைத்து அவர்களிடம் பேசி, பின்னர் பணம் கேட்பதும் மிரட்டுவதும் என இருந்துள்ளார். 

இதற்கு பின்னர் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு அவர் இராணுவ வீரரே கிடையாது என்பது உறுதியாகவே, பாதிக்கப்பட்ட பெண்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், திலீப் குமாரை கைது செய்தனர். 

மேலும், அவரிடம் இருந்து போலி இராணுவ அடையாள அட்டை, அவரின் அலைபேசி போன்றவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. தன்னை சமூக வலைத்தளத்தில் கேப்டன் சேகர் என்ற பெயர் மூலமாக அறிமுகப்படுத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Fake Account and Army Man Arrest By Police 19 June 2021


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?




Seithipunal
--> -->