உத்திரப் பிரதேசத்தில் திடீரென ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கம்.. அதிர்ச்சியில் பொதுமக்கள்.!
Earthquake in uttar pradesh 5.2 rictor measurement
உத்தர பிரதேசத்தின் தலைநகர் லக்னோவில் ரிக்டர் 5.2 அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது.
உத்தர பிரதேச மாநிலத்தின் தலைநகர் லக்னோவில் இன்று அதிகாலை 1.12 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.2 ஆக பதிவாகி இருப்பதாக தேசிய புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலநடுக்கத்தின் மையமானது புவிமட்டத்தில் இருந்து 82 கி.மீ. ஆழத்தில் அமைந்திருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதம் தொடர்பான விவரங்கள் வெளியாகவில்லை. இதற்கு முன்னதாக இரவு 12.55 மணிக்கு உத்தரகாண்ட் மாநிலத்தின் பித்தோராகர் பகுதியில் ரிக்டர் 3.6 அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.
English Summary
Earthquake in uttar pradesh 5.2 rictor measurement