காஷ்மீரில் வாட்ஸ்அப் வீடியோ கால் மூலம் பிரசவம் பார்த்த பெண் மருத்துவர்.! - Seithipunal
Seithipunal


காஷ்மீர் மாநிலத்தில் உள்ள குப்வாரா மாவட்டம் கெரன் கிராம பகுதி அதிக பனிப்பொழிவின் காரணமாக மாவட்டத்தின் மற்ற பகுதிகளில் இருந்து துண்டிக்கப்பட்டுள்ளது. 

இந்த நிலையில் அந்த கிராமத்தில் உள்ள கர்ப்பிணி ஒருவர் பிரசவத்திற்காக ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனுமதிக்கப்பட்டார். ஆனால், அவருக்கு உடலில் பல்வேறு பிரச்சினைகள் இருந்ததால், பிரசவத்தில் சிறிது சிக்கல் ஏற்பட்டது. இதனால், அந்த பெண்ணை கிரால்போராவில் உள்ள மாவட்ட துணை மருத்துவனைக்கு கொண்டு செல்ல வேண்டிய சூழல் ஏற்பட்டது. 

இருப்பினும், அந்த பகுதியில் பனிப்பொழிவு காரணமாக சாலை வழியாகவோ, ஹெலிகாப்டர் மூலமாகவோ அங்கு செல்ல முடியாத நிலை உள்ளது. இதனால் ஆரம்ப சுகாதார நிலைய ஊழியர்கள் என்ன செய்வது என்று திண்டாடினார்கள். 

அப்போது, சுகாதார நிலைய ஊழியர்கள் இது தொடர்பாக கிரால்போரா மருத்துவமனை மகப்பேறு மருத்துவர் பர்வைசுக்கு தகவல் தெரிவித்தனர். அதன் படி,  அவர் வீட்டிலிருந்தே வாட்ஸ்அப் 'வீடியோ கால்' மூலம் ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் அர்சாத் சோபிக்கு அறிவுறுத்தல்களை வழங்கினார். 

அந்த அறிவுரையின் படி, மருத்துவர் அர்சாத் சோபி செயல்பட்டு, கர்ப்பிணிக்கு பிரசவம் பார்த்ததில் அழகான பெண் குழந்தை பிறந்துள்ளது. தற்போது தாயும், சேயும் நலமாக உள்ளதாக ஆரம்ப சுகாதார நிலைய அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர். இந்த அப்பகுதியில் அதிர்ச்சியையும் வியப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

doctors use whatsapp vedio call to baby deliver in jammu kashmeer


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->