இறந்து பிறந்த குழந்தை - தகன மேடையில் நடந்த அதிர்ச்சி.! - Seithipunal
Seithipunal


இறந்து பிறந்த குழந்தை - தகன மேடையில் நடந்த அதிர்ச்சி.!

அசாம் மாநிலத்தில் உள்ள சில்சார் பகுதியை சேர்ந்தவர் ரத்தன் தாஸ். இவர் கடந்த செவ்வாய் கிழமை மாலை தனது கர்ப்பிணி மனைவியை அங்குள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். 

அங்கு கர்ப்பிணியை பரிசோதனை செய்த மருத்துவர்கள் குழந்தை பிறப்பதில் சிக்கல் அதிகரித்து இருப்பதாகவும், தாய் - சேய் இருவரில் ஒருவரை மட்டுமே காப்பாற்ற முடியும் என்றும் தெரிவித்தனர்.

இதையடுத்து அவரது மனைவிக்கு அன்று இரவே அறுவை சிகிச்சை செய்யப்பட்டு, இறந்த நிலையில், ஆண் குழந்தை ஒன்று பிறந்தது. அதனை, அட்டைப் பெட்டியில் வைத்து மருத்துவமனை ஊழியர்கள் அடுத்த நாள் காலையில் தந்தனர்.

அதனை பெற்றுக்கொண்ட ரத்தன் தாஸ், குழந்தைக்கு இறுதி சடங்கு செய்வதற்காக உறவினர்களுடன் சில்சார் சுடுகாட்டுக்கு கொண்டு சென்றார். அங்கு அட்டைப் பெட்டியை பிரித்து குழந்தையின் சடலத்தை எடுத்து எரிப்பதற்காக தகன மேடையில் வைத்தார். 

அப்போது குழந்தை திடீரென வீறிட்டு அழத் தொடங்கியுள்ளது. இதைப்பார்த்து அங்கிருந்தவர்கள் அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக குழந்தையை மீண்டும் தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். 

அங்கு குழந்தை உயிரோடு இருப்பதை ஆச்சரியத்தோடு உறுதி செய்த மருத்துவர்கள், குழந்தைக்கு அவசியமான அவசர சிகிச்சைகளை வழங்கினார். இந்தச் சம்பவம் அனைவரிடமும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

died baby again survived funeral in assam


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->