டெல்லி || கட்டுமான பணிகளின் போது இடிந்து விழுந்த கட்டிடம்.. இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணி தீவிரம்..! - Seithipunal
Seithipunal


இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுப்பட்டு வருகின்றனர்.

டெல்லியில் ஆசாத் மார்க்கெட் பகுதியில் ஷீஷ் மஹால் அருகே, புதிதாக 4 மாடிகளை கொண்ட அடுக்குமாடி கட்டிடம் ஒன்று புதிதாக கட்டப்பட்டு வருகிறது. இந்நிலையில்,  அந்த கட்டிடம் இடிந்து விழுந்து தரைமட்டமானது.  கட்டிட வேலையில் ஈடுப்பட்டிருந்த தொழிலாளர்கள் இடிபாடுகளுக்குள் சிக்கினர்.  தகவலறிந்து விரைந்து வந்த மீட்புப்படையினர் இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுப்பட்டனர்.

இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். மேலும், சிலர் இடிபாடுகளில் சிக்கியிருக்கலாம் என தகவல்கள் வெளிவருகின்றன. தேசிய பேரிடர் மீட்பு படையினரும் சம்பவ இடத்திற்கு வந்து மீட்பு பணியை மேலும் தீவிரப்படுத்தியுள்ளனர். முதற்கட்ட விசாரணையில், கட்டடம் அதிக எடை கொண்டது என்பதால் இடிந்து விழுந்திருக்கலாம் என தெரியவந்துள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Delhi Police Rescue the people building collapses


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->