இன்னும் ஒரு வாரம்..., அறிவிப்பை வெளியிட்ட டெல்லி முதல்வர்.. சோகத்தில் தொழிலாளர்கள்.! - Seithipunal
Seithipunal


இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 4,01,993 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதேபோல் கடந்த  24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பால் 3523 பேர் உயிரிழந்துள்ளனர். இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,91,64,969 ஆக உயர்ந்துள்ளது. 

கொரோனாவிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 1,56,84,406 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 2,11,853 ஆக உயர்ந்துள்ளது என மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்தியாவின் தலைநகரான டெல்லி மாநிலத்தில் நாளொன்றுக்கு 27 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில், டெல்லியில் மேலும் ஒரு வாரம் ஊரடங்கு நீட்டிப்பு செய்யப்படுவதாக அம்மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். டெல்லியில் ஏற்கனவே இரண்டு வார கால ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு நீட்டிப்பு செய்யப்பட்டு இருந்த நிலையில், கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் மேலும் ஒருவார காலம் ஊரடங்கு நீட்டிப்பு செய்யப்பட்டு அறிவிக்கப்பட்டுள்ளது.

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Delhi Lockdown Imposed by Another one week Announced by CM Arvind Kejriwal 1 May 2021


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->