தங்க சங்கிலியை மாடு விழுங்க., சாணத்தை எதிர்பார்த்து காத்திருந்த பெண்.! வெளிவந்த அதிர்ச்சி.!
cow eat gold chain in haryana
ஹரியானா மாநிலத்தில் காலன்வாலி என்ற கிராமத்தில் ரவீந்திர பாட் என்ற பெண் வீட்டில் சமையல் வேலை செய்து இருக்கின்றார். அப்பொழுது காய்கறி நறுக்கும் சமயத்தில் தங்கச்சங்கிலியை அருகில் இருந்த காய்கறி பெட்டியில் கழட்டி வைத்துள்ளார்.
இந்நிலையில், தங்க சங்கிலி வைத்து இருந்ததை மறந்து விட்டு அதில் காய்கறி கழிவுகளை கொட்டி அவர்கள் வீட்டிற்கு பின்னால் இருக்கும் மாட்டுத்தீவன பெட்டியில் போட்டு விட்டார். இதனைத்தொடர்ந்து மாடு தீவனத்துடன் தங்கச்சங்கிலியையும் மாடு சேர்த்து சாப்பிட்டுள்ளது.
மாடு சாப்பிட்ட தங்கச்செயின் 30 கிராம் எடை கொண்டது. ஒரு லட்சம் மதிப்புடையது. இந்நிலையில் மாட்டிற்கு தீவனம் கொடுத்தால் அதன் சாணியில் தங்கச்செயின் வந்துவிடும் என நினைத்து மூன்று நாட்களாக மாட்டிற்கு தீவனம் வழங்கிவருகின்றனர். இருப்பினும் தங்கச்சங்கிலி வெளி வந்த பாடில்லை.
இதுகுறித்து கால்நடை மருத்துவரிடம் தெரிவித்து உள்ளனர். அறுவை சிகிச்சை செய்து மாட்டின் உள்ளே இருக்கும் செயினை அகற்ற வேண்டும் எனில் அதில் ஆபத்து இருக்கிறது என அவர் தெரிவிக்க, சரி அந்த செயின் சாணி வழியே வெளியே வந்துவிடும் என காத்துக் கொண்டிருக்கின்றனர்.
English Summary
cow eat gold chain in haryana