காங்கிரஸ் வேட்பாளர் மீது வழக்குப்பதிவு! காரணம் என்ன?
Congress candidate against Case filed
தெலுங்கானா காங்கிரஸ் வேட்பாளர் வாக்காளருக்கு பணம் வழங்கியதால் அவர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
தெலங்கானா, சட்டப்பேரவை தேர்தல் நாளை ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு மாநிலம் முழுவதும் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளது.
இந்நிலையில் சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்னதாக வாக்காளர் ஒருவருக்கு ரூ. 1 லட்சம் பணம் வாங்கியதாக காங்கிரஸ் வேட்பாளர் மீது புகார் எழுந்தது.
புகாரின் பேரில் போலீசார் காங்கிரஸ் வேட்பாளர் மீது வாக்காளரை அச்சுறுத்தல் மற்றும் தூண்டுதல் 171 சி உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
ராஜஸ்தான், மத்திய பிரதேசம், மிசோரம் உள்பட 5 மாநிலங்களுக்கு டிசம்பர் 3ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது.
English Summary
Congress candidate against Case filed