தெலுங்கானா மாநிலம் உதயமான நாள்.! பிரதமர் மோடி வாழ்த்து.! - Seithipunal
Seithipunal


தெலுங்கானா மாநிலம் உருவான தினத்தையொட்டி அம்மாநில மக்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் இருந்து தெலுங்கானா பிரிக்கப்பட்டு ஜூன் 2, 2014 முதல் தனி மாநிலமாக செயல்படத் தொடங்கியது.

இதைத் தொடர்ந்து ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் இரண்டாம் தேதி தெலுங்கானா மாநிலம் உருவான நாளாக கொண்டாடப்படுகிறது.

இந்நிலையில் தெலுங்கானா மாநிலம் உருவான நாளையொட்டி, அம்மாநில மக்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து பிரதமர் மோடி வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில்,

 ''தெலுங்கானா மக்கள் கடின உழைப்பு மற்றும் தேசிய முன்னேற்றத்திற்கான இணையற்ற அர்ப்பணிப்புடன் உள்ளனர். தெலுங்கானா மாநிலத்தின் கலாச்சாரம் உலகப் புகழ் பெற்றது. தெலுங்கானா மக்களின் நலனுக்காக நான் பிரார்த்திக்கிறேன்'' என்று தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Congratulations Pm Modi on the day formation of Telangana


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->