மும்பை || விருந்து நிகழ்ச்சியில் போதைப்பொருள் விற்பனை செய்த கல்லூரி மாணவர் கைது.!! - Seithipunal
Seithipunal


மும்பை || விருந்து நிகழ்ச்சியில் போதைப்பொருள் விற்பனை செய்த கல்லூரி மாணவர் கைது.!!

மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள மும்பையில் சினிமா நட்சத்திரங்கள் மற்றும் பிரபலங்கள் பங்கேற்கும் விருந்து நிகழ்ச்சிகளில் மாணவர் ஒருவர் போதைப்பொருள் விற்பனை செய்து வருவதாக போதை தடுப்பு பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. 

அந்த தகவலின் படி போலீசார் நடத்திய விசாரணையில், விருந்து நிகழ்ச்சியில் போதைப்பொருளை வினியோகம் செய்பவர் அந்தேரி மரோலை சேர்ந்த கல்லூரி மாணவர் ரிஷிகேஷ் என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் மாணவரின் வீட்டின் அருகே சென்று கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். 

அப்போது, போலீசார் தனது வீட்டில் இருந்து வெளியே வந்த மாணவர் ரிஷிகேசை பிடித்து சோதனை நடத்தினர். அதில், அவரிடம் இருந்து ரூ.52 லட்சத்து 22 ஆயிரம் மதிப்புள்ள எல்.எஸ்.டி. என்ற போதைப்பொருளை பறிமுதல் செய்யப்பட்டது.

அதன் பின்னர் போலீசார் அந்த மாணவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், அவர் கொரோனா காலகட்டத்தில் போதைப்பொருள் விற்று பணம் சம்பாதித்து வந்ததும், நட்சத்திர விருந்து நிகழ்ச்சிகளுக்கு போதைப்பொருளை சப்ளை செய்ததும் தெரியவந்தது. 

இதைத்தொடர்ந்து போலீசார் அந்த மாணவர் மீது வழக்கு பதிவு செய்து அவரைக் கைது செய்தனர். மேலும், அந்த மாணவருக்கு போதைப்பொருள் வினியோகம் செய்த முக்கிய புள்ளியை தீவிரமாகத் தேடி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

college student arrested for drugs sale in mumbai


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->