காதலிக்க மறுத்த கல்லூரி மாணவி.. கழுத்தை அறுத்து கொலை செய்ய முயற்சி.! - Seithipunal
Seithipunal


ஆந்திராவில் காதலிக்க மறுத்த மாணவியை இளைஞர் ஒருவர் கத்தியால் கழுத்தை அறுத்து கொலை செய்ய முயற்சித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திர மாநிலம் நெல்லூர் மாவட்டத்தில் உள்ள வெங்கடகிரியை சேர்ந்த 18 வயது இளம்பெண் தனியார் பியூசி கல்லூரி படித்து வருகிறார். இந்த நிலையில் அதே பகுதியை சேர்ந்த செஞ்சு கிருஷ்ணா என்ற இளைஞர் அந்த இளம் பெண்ணை ஒருதலையாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.

செஞ்சி கிருஷ்ணா பலமுறை தனது காதலை அந்த இளம்பெண்ணிடம் கூறியும், அந்தப் பெண் காதலை ஏற்க மறுத்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த செஞ்சி கிருஷ்ணா இன்று காலை கல்லூரிக்கு சென்று கொண்டிருந்த அந்த மாணவியை வழிமறித்து கத்தியால் குத்தியும் அவருடைய கழுத்தை அறுக்க முயற்சி செய்துள்ளார்.

இதனையடுத்து மாணவியின் அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு வெங்கடகிரி யில் உள்ள அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். ஆபத்தான நிலையில் இருக்கும் அந்த மாணவிக்கு அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த போலீசார் மாணவியை கத்தியால் குத்தி கொலை செய்ய முயன்ற தலைமறைவாகியுள்ள செஞ்சு கிருஷ்ணாவை தீவிரமாக தேடி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

College girl didn't accept love boy try to attack


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->