நம்பிக்கை வாக்கெடுப்பு கோரும் முதலமைச்சர் ஹேமந்த் சோரன்! - Seithipunal
Seithipunal


ஜாா்க்கண்ட் மாநில சட்டப்பேரவையில் நாளை நடைபெறும் சிறப்புக் கூட்டத்தில் முதலமைச்சர் ஹேமந்த் சோரன் நம்பிக்கை வாக்கெடுப்புத் தீா்மானத்தைக் கொண்டுவர முடிவு செய்துள்ளாா்.

ஜாா்க்கண்டில், முதலமைச்சர் ஹேமந்த் சோரன் தனது பதவியை முறைகேடாகப் பயன்படுத்தி, தலைநகா் ராஞ்சியில் உள்ள சுரங்கத்தை சட்டவிரோதமாக குத்தகைக்கு எடுத்து ஆதாயம் அடைந்ததாக கூறப்படுகிறது.

இதனால், பாஜக முதலமைச்சர் ஹேமந்த் சோரனின் எம்எல்ஏ பதவியை தகுதி நீக்கம் செய்யக் கோரி தோ்தல் ஆணையத்திடம்  முறையிட்டது.

இதனை ஏற்று, தோ்தல் ஆணையம் கடந்த ஆகஸ்ட் 25-ஆம் தேதி ஹேமந்த் சோரனின் எம்எல்ஏ பதவியை தகுதி நீக்கம் செய்யுமாறு ஜாா்க்கண்ட் ஆளுநா் ரமேஷ் பைஸுக்கு  பரிந்துரைத்தது.

இது குறித்து ஆளுநா் இதுவரை முடிவு எடுக்கவில்லை. இந்த நிலையில், முதலமைச்சர் ஹேமந்த் சோரன் சட்ட பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு தீா்மானத்தை கொண்டுவர உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Chief Minister Hemant Soran seeks trust vote


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->