உ.பியில் பரிதாபம் - பிரதமர் மோடிக்கு ஆதரவாக பேசிய பயணி மீது காரை ஏற்றி கொன்ற ஓட்டுநர்.!! - Seithipunal
Seithipunal


உ.பியில் பரிதாபம் - பிரதமர் மோடிக்கு ஆதரவாக பேசிய பயணி மீது காரை ஏற்றி கொன்ற ஓட்டுநர்.!!

உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள மிர்சாபூர் நகரத்தில் ராஜேஷ் துபே என்பவர் வாடகை சொகுசு காரில் பயணம் செய்துள்ளார். அந்தக் காரை அம்ஜத் என்பவர் ஒட்டியுள்ளார். 

அப்போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு, இருவரும் பிரதமர் மோடி குறித்தும் மற்றும் முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் குறித்தும் பேசி விவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த வாக்குவாதம் சிறிது நேரத்தில் கடுமையாக மாறியதை தொடர்ந்து ராஜேஷை வீட்டின் அருகே இறக்கிவிட்ட ஓட்டுநர் அம்ஜத், திடீரென்று ராஜேஷ் மீது காரை ஏற்றியுள்ளார். இதில் ராஜேஷ் சம்பவ இடத்திலேயே தலை நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தார். 

இது குறித்து தகவல் அறிந்த அப்பகுதி மக்கள் கொலைக் குற்றத்தில் ஈடுபட்ட ஓட்டுநர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கும்படி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சம்பவம் குறித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர்.

போலீசார் அளித்த வாக்குறுதியின் படி போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் அங்கிருந்து கலைந்துச் சென்றனர். இந்தச் சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

car driver kill passenger for support prime minister modi in uttar pradesh


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->