பகீர் தகவல்! தற்காலிகமாக 15% விமான சேவையை நிறுத்தும் ஏர் இந்தியா...! - Seithipunal
Seithipunal


கடந்த 12-ந்தேதி, குஜராத் அகமதாபாத்தில் லண்டனுக்கு புறப்பட்ட 'ஏர் இந்தியா' விமானம் வெடித்து விபத்துக்குள்ளானது. அதில், விமானத்தில் பயணம் செய்த 241 பேரும், விபத்து பகுதியிலிருந்த 29 பேரும் அநியாயமாக உயிரிழந்தனர்.இதையடுத்து, கடந்த சில தினங்களாக 'ஏர் இந்தியா' விமானங்கள் ரத்துசெய்யப்பட்டு வருகின்றன.

மேலும், கடந்த ஜூன் 17-ம் தேதி ஏர் இந்தியாவின் 6 சர்வதேச விமானங்கள் ரத்துசெய்யப்பட்டன. குறிப்பாக, கடந்த 6 நாட்களில் மட்டும் 83 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.இந்த சூழலில், ஏர் இந்தியா சர்வதேச சேவைகளை 15 % குறைக்க முடிவு செய்துள்ளது.

ஏர் இந்தியா:

மேலும் இதுகுறித்து தெரிவிக்கையில்,"விமானச் செயல்பாடுகளின் நம்பகத்தன்மையை மற்றும் சிறந்த செயல்திறனை உறுதி செய்வதற்கும் பயணிகளுக்கு ஏற்படும் சிரமத்தைக் குறைப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றன.

இந்த நடவடிக்கை ஜூன் 20 முதல் குறைந்தபட்சம் ஜூலை 15-ம் தேதி வரை தொடரும். இந்த சேவை குறைப்பால் பாதிக்கப்படும் பயணிகளிடம் ஏர் இந்தியா மன்னிப்பு கேட்டுக்கொள்கிறது.

பயணிகளுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் ஏர் இந்தியா மேற்கொள்ளும். திருத்தப்பட்ட புதிய அட்டவணை விரைவில் வெளியிடப்படும்" எனத் தெரிவித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Breaking news Air India to temporarily suspend 15 percentage of its flights


கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!



Advertisement

கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!




Seithipunal
--> -->