டெல்லியில் மூன்று பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்.! - Seithipunal
Seithipunal


தலைநகர் டெல்லியில் துவாரகா, நொய்டா உள்ளிட்ட இடங்களில் உள்ள துவாரகா பப்ளிக் பள்ளி, டெல்லி பப்ளிக் பள்ளி, மதர் மேரிஸ் உள்ளிட்ட பள்ளிகளுக்கு இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.

இதனால், நொய்டா பப்ளிக் பள்ளிக்கு வந்த மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களை அவசர அவசரமாக வெளியேற்றம் செய்து பள்ளிக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. பின்னர் இந்த சம்பவம் தொடர்பாக காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. 

அதன் படி பள்ளிக்கு விரைந்து வந்த போலீசார் வெடிகுண்டு நிபுணர்கள் உதவியுடன் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், பள்ளிகளுக்கு சமீபத்தில் வந்த வெடிகுண்டு மிரட்டல் விடுத்த அதே இ-மெயில் மூலம் ஒரே விதமாக மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. மேலும், இந்த சம்பவம் குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

bomb threat to three schools in delhi


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->