டெல்லி விமான நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்.! அதிர்ச்சியில் பயணிகள்.! - Seithipunal
Seithipunal


நாட்டின் தலைநகரான டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் நேற்று இரவு  தரையிறங்கத் திட்டமிடப்பட்டிருந்த தர்பங்கா - டெல்லி ஸ்பைஸ்ஜெட் விமானத்தில்  வெடிகுண்டு இருப்பதாக விமான நிலையக் கட்டுப்பாட்டு அறைக்கு தொலைபேசி மூலம் மிரட்டல் விடப்பட்டது. 

இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த ஊழியர்கள் உடனடியாக விமானத்தை தனிமைப்படுத்தப்பட்ட பகுதிக்கு மாற்றியதுடன் விமான நிலையத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.

பின்னர் மத்திய தொழில் பாதுகாப்பு படைக்குழுவினர் வெடிகுண்டு மிரட்டல் விடப்பட்ட பயணிகளின் உடமைகளைச் சோதனையிட்டனர். மேலும், வெடிகுண்டு நிபுணர்களும் வரவழைக்கப்பட்டு தீவிரமாக சோதனை செய்தனர். ஆனால் விமானத்தில் வெடிகுண்டு பொருட்கள்  எதுவும் கண்டுபிடிக்கப்படாததால், இந்த மிரட்டல் வதந்தி என்பது தெரிய வந்தது.

டெல்லியில் இந்தியக் குடியரசு தின விழா நிகழ்ச்சிகள் நடைபெற உள்ள நிலையில், அதற்கு முன்னதாக விமான நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்திருப்பது பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

bomb threat to delhi airport


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->