இஸ்லாமியர்கள் தற்கொலைப்படையாக களமிறங்கி கொரோனாவை பரப்புகின்றனரா.? திகில் கொடுக்கும் அதிர்ச்சி தகவல்.!
Bjp leader says about nijamabath meet
சில நாட்களுக்கு முன்னர் தலைநகர் டெல்லியில் முஸ்லிம் இயக்கங்கள் ஏற்பாடு செய்த நிஜாமாபாத் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த பொதுக்கூட்டமானது தலிபான் தீவிரவாதிகளின் திட்டமிட்ட சதி தாக்குதல் போன்றது என மத்திய அமைச்சர் முக்தார் அப்பாஸ் நக்வி விமர்சனம் செய்துள்ளார். இது தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தலைநகர் டெல்லியில் சென்ற மார்ச் மாதம் எட்டாம் தேதி முதல் பதினைந்தாம் தேதி வரை நிஜாமாபாத் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த மாநாட்டில் கலந்துகொண்டவர்கள் மூலம் நோய்த் தொற்று பாதிப்பு அதிகமாகி உள்ளதாக செய்திகள் உலா வருகின்றன.
இந்த நிலையில் இந்தியாவில் கொரோனா பாதிப்புக்கு நிஜாமுதீன் மாநாடு தான் காரணம் என்று ஃபேஸ்புக், ட்விட்டர் போன்ற சமூக ஊடங்களில் மிகக் கடுமையாக விமர்சனம் செய்யப்படுகிறது.
தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு இல்லை என மத்திய அரசாங்கம் ஒருமுறைக்கு பலமுறை கூறி வந்த நேரத்தில் அந்த மாநாடு நடந்தது. அந்த மாநாட்டில் கலந்துகொள்ள வெளிநாடுகளில் இருந்து ஏராளமானோர் வந்ததாக கூறப்படுகிறது.
ஆகவே அவர்கள் மூலமாக இந்த நோய் பரவி உள்ளது என்று சொல்லப்படுகிறது. இப்படிப்பட்ட சூழ்நிலையில் அந்த பொதுக்கூட்டம் குறித்து மத்திய அமைச்சரும் பாரதிய ஜனதா கட்சியின் முக்கிய தலைவருமான முக்தார் அப்பாஸ் நக்வி மிகக் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.
இந்த விவகாரம் குறித்து அவர் கூறுகையில்:- நிஜாமாபாத் பொதுக்கூட்டம் நடந்தது தாலிபான் தீவிரவாதிகள் திட்டமிட்டு நடத்தப்பட்ட தீவிரவாத தாக்குதல் போன்ற ஒரு பயங்கரமான செயல்.
இதுபோன்ற செயல்களில் ஈடுபடுபவர்களை ஒருபோதும் மன்னிக்க முடியாது. நாட்டு மக்களின் வாழ்வாதாரத்தை மிகவும் ஆபத்தான சூழ்நிலையில் கொண்டு போய் விட்டுவிடுவார்கள்.
ஜனநாயக முறைப்படி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு அரசாங்கத்தின் உத்தரவை மீறும் இதுபோன்ற அமைப்பினர், மீது கடுமையாக நடவடிக்கை எடுக்க மத்திய அரசு பரிசீலனை செய்ய வேண்டும்." என தெரிவித்துள்ளார்.
English Summary
Bjp leader says about nijamabath meet