#Budget2024 ||‌ சமூக நீதி தான் பாஜகவின் குறிக்கோள்.!! - நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்.!! - Seithipunal
Seithipunal


நாடாளுமன்ற பொது தேர்தல் நடைபெற உள்ள நிலையில் இடைக்கால பட்ஜெட் கூட்டத்தொடர் நேற்று ஆளுநர் உரையுடன் தொடங்கியது இந்த நிலையில் இன்று இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்த மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் உரையாற்றி வருகிறார். 

அவர் தனது உரையின் போது திறன்மிகு இந்தியா திட்டத்தின் மூலம் 1.4 கோடி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அனைத்து பகுதி மக்களுக்கும் அனைத்து விதமான வளர்ச்சியே எங்களின் குறிக்கோள் பாஜக ஆட்சிக்கு வந்த பின்னர் நாட்டின் பொருளாதாரம் மேம்பாடு அடைந்துள்ளது.

மக்களுக்கான திட்டங்கள் உருவாக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டதில் நாட்டு மக்களிடையே புதிய நம்பிக்கை உருவாகியுள்ளது. அனைத்து மாநிலங்களுக்குமான வளர்ச்சி ஊழல் ஒழிப்பு என்பது அரசின் பிரதான குறிக்கோளாகும். 

நிர்வாகத்தில் வெளிப்படத் தன்மையை கடைப்பிடித்து வரும் 2047ல் புதிய இந்தியாவை படைப்போம். சமூக நீதிதான் மத்திய பாஜக அரசின் பிரதான குறிக்கோள். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Bjp govt work for social justice


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->