பாலத்திற்கு அடியில் சிக்கிய ஏர் இந்தியா விமானம்: நடந்தது என்ன? - Seithipunal
Seithipunal


பீகார், மோதிஹாரியில் பாலத்தின் அடியில் விமானம் ஒன்று சிக்கி கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

மும்பையில் இருந்து அசாமிற்கு பழைய ஏர் இந்தியா விமானம் ஒன்றை லாரியில் எடுத்துச் சென்றபோது எதிர்பாராத விதமாக பாலத்திற்கு அடியில் சிக்கிக்கொண்டது. 

இதனால் அந்த பகுதியில் நீண்ட நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டு வாகன ஓட்டிகள் அவதி அடைந்தனர். பின்னர் ஒரு மணி நேரம் போராடி லாரி மீட்கப்பட்டதை தொடர்ந்து போக்குவரத்து சீரமைக்கப்பட்டது. 

லாரி ஓட்டுநர் பாலத்தின் உயரத்தை தவறாக கணித்ததால் எதிர்பாராத விதமாக விமானம் சிக்கிக் கொண்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர். இது தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Bihar Air India plane stuck under bridge


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->