உனக்கு என்னடீ குறை வச்சேன்.. சுத்தியால் அந்த இடத்தில் அடித்துகொன்ற கொடூரன்.!
Bengaluru illegal affair makesissue
பெங்களூர் பகுதியைச் சேர்ந்த 35 வயது மதிக்கத்தக்க மஞ்சுளா கடந்த ஏழு வருடத்திற்கு முன் தனது கணவரை பிரிந்து குழந்தைகளையும் விட்டுவிட்டு தனியாக வீடு எடுத்து வசித்து வந்துள்ளார். வீடுகளில் பணிப்பெண்ணாக வேலை பார்த்து வசித்து வந்த அவருக்கு அலெக்ஸ் என்ற நபருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.
இருவரும் லிவிங் டூ கெதராக வாழ்ந்து வந்த நிலையில் அதே நேரத்தில் மஞ்சுளாவுக்கு வேறொரு நபர் மீது காதல் ஏற்பட்டுள்ளது. இதனால் தனது புது காதலனுடன் மஞ்சுளா தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்து வந்துள்ளார்.
இதுபற்றி அலெக்ஸ்க்கு விஷயம் தெரிய கடந்த ஜனவரி 7ஆம் தேதி மது அருந்துவிட்டு தகராறு செய்துள்ளார். அப்போது அலெக்ஸ் ஆத்திரத்தின் உச்சியில் மஞ்சுளாவை சுத்தியால் அவர் ஓங்கி அடித்துள்ளார். அவரது தொடை எலும்பு முறிந்து விட அவர் மறுநாள் வரை மயக்கத்தில் இருப்பதாக நினைத்த அலெக்ஸ் மருத்துவமனையில் அவரை கொண்டு சேர்த்துள்ளார்.
மருத்துவர்கள் அவர் மரணமடைந்து விட்டதாக கூற அங்கிருந்து அலெக்ஸ் தப்பியோடியுள்ளார். பின்னர் மருத்துவமனையில் இருந்த அனாதை பிணம் யார் என்பது தெரியாமல் இருந்த நிலையில் மஞ்சுளாவின் அண்ணன் அவரை காணவில்லை என்று காவல் நிலையத்தில் புகார் அளிக்கையில் இது குறித்த உண்மை போலீசாருக்கு தெரிய வந்துள்ளது. நேற்று அலெக்ஸை தேடி கண்டுபிடித்து கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
English Summary
Bengaluru illegal affair makesissue