கர்ப்பிணி பெண்ணிற்கு பிரசவ வலி.. பல் மருத்துவமனையில் பிரசவம்... இன்ப அதிர்ச்சி கொடுத்த குழந்தை.!! - Seithipunal
Seithipunal


இந்தியாவின் கர்நாடக மாநிலத்தில் உள்ள பெங்களூர் பகுதியில் கணவன் - மனைவி வசித்து வருகின்றனர். இதில் பெண் நிறைமாத கர்ப்பிணியாக இருந்து வரும் நிலையில், பெண்ணிற்கு இன்று திடீரென பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. 

இதனையடுத்து வாகன போக்குவரத்து இல்லாத சூழ்நிலையில், பெண்மணி தனது கணவருடன் சுமார் 7 கிமீ தூரம் நடந்தே வந்துள்ளார். மேலும், இவர்கள் வரும் வழியில் மருத்துவமனை உள்ளதா? என்று பார்த்துக்கொண்டு வந்துள்ளனர். 

இந்த சமயத்தில், அங்குள்ள பல் மருத்துவமனை இவர்களின் கண்ணில் தென்படவே, பல் மருத்துவமனைக்கு சென்று விஷயத்தை கூறியுள்ளனர். இந்த சமயத்தில் பெண்ணின் பிரசவ வலி அதிகரிக்கவே, பல் மருத்துவமனையில் இருந்த பெண் மருத்துவர் பிரசவம் பார்த்துள்ளார்.. 

இதனையடுத்து பெண்ணிற்கு பிறந்த குழந்தை முதலில் எந்த விதமான சத்தமும் எழுப்பாமல் இருந்துள்ளது. இதனால் குழந்தை இறந்துவிட்டதாக அனைவரும் எண்ணியிருந்த நிலையில், குழந்தை தனக்கு உயிர் இருப்பதை உறுதி செய்துள்ளது. 

இதன் பின்னர் பல் மருத்துவர் ரம்யாவின் உதவியுடன் பெண் அங்குள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். மேலும், பல் மருத்துவரின் செயலை கணவன் மனைவி கண்ணீருடன் நன்றி தெரிவித்தனர். இது குறித்த தகவல் தற்போது வெளியாகிஉள்ளது.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Bangalore girl pregnant delivery help of dentist doctor due covid 19 amid


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->