சாலையோரத்தில் படுத்திருந்த பெண்ணின் சேலையை உருவி.. மர்ம நபர்கள் செய்த வெறிச்செயல்.! - Seithipunal
Seithipunal


சாலை ஓரத்தில் படுத்திருந்த பெண்ணை பலாத்காரம் செய்த ஆட்டோ டிரைவரையும், அவரது நண்பரையும் போலீசார் தேடி வருகின்றனர்.

டெல்லியின் காஜிபூர் பகுதியில் 35 வயதான அனாதை பெண் ஒருவர் அங்குள்ள சாலையில் வசித்து வந்தார். அவர் தினமும் அந்த சாலையோரத்தில் பிளாட்பார்மில் படுத்து உறங்குவது வழக்கம். இதை அந்த பகுதியில் வசிக்கும் ஆட்டோ ஓட்டுநர் ஒருவர் கவனித்து வந்தார்.

அதன்பிறகு கடந்த சில நாட்கள் முன்பு நள்ளிரவில் அந்த பெண்ணை அங்கு உள்ள ஒதுக்குப்புறமான இடத்திற்கு இழுத்துச் சென்ற அவரும், அவரின் நண்பரும் சேர்ந்து பாலியல் பலாத்காரம் செய்தனர். அதன்பிறகு மயக்கத்தில் கிடந்த அந்தப் பெண்ணை போலீசார் மீட்டு அவரை கிழக்கு டெல்லியில் உள்ள லால் பகதூர் சாஸ்திரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

அதன் பின்னர் மேல்சிகிச்சைக்காக சப்தர்ஜங் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டதாகவும் போலீஸார் தெரிவித்தனர். அந்தப் பெண்ணை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவரது உடலின் அந்தரங்கப் பகுதியில் அதிக காயம் ஏற்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். மேற்கொண்டு வழக்கு பதிவு செய்த போலீசார் குற்றவாளிகள் இருவரையும் தீவிரமாக தேடி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Auto driver raped on delhi


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->