வங்கதேச இந்துக்களுக்கு எதிரான தாக்குதல்: கொல்கத்தாவில் மருத்துவர்கள் எதிர்ப்பு! - Seithipunal
Seithipunal


கொல்கத்தா: வங்கதேசத்தில் சிறுபான்மையினராக உள்ள இந்து சமூகத்தினருக்கு எதிரான தாக்குதல்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், மேற்கு வங்க மாநிலத்தில் பெரும் எதிர்ப்பு கிளர்ச்சியாக மாறியுள்ளது.

இஸ்கான் கோயிலின் மதகுரு சின்மயி கிருஷ்ண தாஸ் டாக்காவில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட சம்பவம் வங்கதேசத்தின் இந்து விரோத நடவடிக்கைகளுக்கு எதிராக மேலும் எரிச்சலை ஏற்படுத்தியுள்ளது. இந்து சமூகத்தின் மீது நடத்தப்படும் தாக்குதல்களை கண்டித்து, மேற்கு வங்கத்தில் பல்வேறு அமைப்புகள் மற்றும் பொதுமக்கள் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதன் ஒரு பகுதியாக, கொல்கத்தா மருத்துவமனைகளில் பணிபுரியும் மருத்துவர்கள் சிலர், வங்கதேசத்திலிருந்து சிகிச்சைக்காக வரும் நோயாளிகளுக்கு சேவை வழங்க மாட்டோம் என அறிவித்துள்ளனர். மருத்துவர்கள் இந்த முடிவை வெளிப்படையாக அறிவித்ததற்காக மக்கள் மத்தியில் மிகுந்த விவாதத்துக்கு உள்ளாகியுள்ளனர்.

சிலிகுரியில் உள்ள இஎன்டி (காது, மூக்கு, தொண்டை) மருத்துவர் சேகர் பந்தோபாத்யாய், வங்கதேசத்திலிருந்து வரும் நோயாளிகளுக்கு, சிகிச்சைக்கு முன் இந்திய தேசியக் கொடிக்கு மரியாதை செலுத்த வேண்டும் என கடுமையாக அறிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில்,"வங்கதேசத்தவர்கள், இந்திய தேசியக்கொடியை அவமதிப்பது மன வலியை ஏற்படுத்தியுள்ளது. நான் ஒரு மருத்துவர் என்ற முறையில் நோயாளிகளுக்கு சிகிச்சை மறுக்க இயலாது. ஆனால், என்னிடம் சிகிச்சை பெற விரும்பும் ஒருவர் இந்திய தேசியக் கொடிக்கும், இந்த மண்ணுக்கும் மரியாதை செலுத்த வேண்டும். இதுவே எனது நிபந்தனை. தற்போது, வங்கதேசத்தின் செயல்பாடுகள் தலிபான் மனநிலைக்கு தாழ்ந்துவிட்டது," என்று தனது நிலைப்பாட்டை தெளிவுபடுத்தினார்.

மேற்கு வங்கத்தில் பரவலாக நடந்துவரும் இந்த போராட்டங்கள், வங்கதேசத்தின் இந்து சமூகத்தினருக்கு எதிரான தாக்குதல்களுக்கு ஆற்றப்படும் கண்டனமாகவும், வங்கதேச அரசின் போக்குக்கு எதிரான எச்சரிக்கையாகவும் பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில், இரு நாடுகளின் இடையிலான சமூக உறவுகள் மேலும் மோசமடையும் என்ற அச்சம் உருவாகியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Attack on Bangladeshi Hindus Doctors protest in Kolkata


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->