லாரி- பேருந்து நேருக்கு நேர் மோதி கொடூர விபத்து: 12 பேர் பரிதாப பலி!  - Seithipunal
Seithipunal


அஸாம், கோலாகட் பாலிஜன் அருகே இன்று அதிகாலை சுற்றுலா பேருந்து-லாரி நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 12 பேர் உயிரிழந்துள்ளனர் 25 பேர் காயமடைந்துள்ளனர்.

அஸாம்கோலாகட் மாவட்டத்தில் உள்ள பாலஜன் நகருக்கு 45 பேர் கொண்ட சுற்றுலா பேருந்து சென்று கொண்டிருந்தது. பேருந்து திலிங்க மந்திர் அருகே இன்று அதிகாலை 5 மணி அளவில் சென்று கொண்டிருந்தபோது எதிரே நிலக்கரி ஏற்றி வந்த லாரி திடீரென ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து சுற்றுலா பேருந்து மீது மோதி விபத்து ஏற்பட்டது. 

இது குறித்து தகவல் அறிந்த மீட்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

இந்த விபத்தில் சுற்றுலா பேருந்தில் இருந்த 10 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்த விட்டனர். மேலும் 2 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்து விட்டனர். 

படுகாயம் அடைந்த 25 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். போலீசார் இந்த விபத்து தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.  
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Assam Lorry Bus collision accident 12 people killed


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->