அசாமில் கடும் வெள்ளப்பெருக்கு : பலி எண்ணிக்கை 135 ஆக அதிகரிப்பு.. 2.17 லட்சம் பேர் பாதிப்பு.!
Assam flood 135 peoples death
அசாமில் பெய்து வரும் கனமழை மற்றும் வெள்ளத்திற்கு பலி எண்ணிக்கை 135 ஆக உயர்ந்துள்ளதுடன், 2.17 லட்சம் பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
அசாம் மாநிலத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால், மாநிலம் முழுவதும் பல்வேறு இடங்களில் வெள்ளப் பெருக்கு மற்றும் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது
மேலும், முக்கிய ஆறுகளில் வெள்ளநீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.வெள்ளம் காரணமாக பல்வேறு மாவட்டங்களில் சாலை போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. அதன்காரணமாக பல்வேறு பகுதிகளில் மின் இணைப்பும் துண்டிக்கப்பட்டுள்ளது. வெள்ளத்தில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணியில் தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்புக்குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்தநிலையில் வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 135ஆக அதிகரித்துள்ளது.
மேலும், மீட்பு பணி மற்றும் நிவாரணப் பொருட்கள் விநியோகத்தில் பேரிடர் மீட்பு படையினர் மற்றும் விமானப் படையினர் தீவிரம் காட்டி வருகின்றனர். இதுவரை 2.17 லட்சம் பேர் மீட்கப்பட்டு 564 நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
English Summary
Assam flood 135 peoples death