முறைகேடு வழக்கு: அரவிந்த் கெஜ்ரிவாலின் அமலாக்கத்துறை காவல் நீடிப்பு.!
Arvind kejriwal ed remand extends
டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் கடந்த 21ஆம் தேதி அமலாக்கத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.
அவரை இன்று வரை காவலில் எடுத்து விசாரணை நடத்துவதற்கு டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. அதன்படி இன்றுடன் அரவிந்த் கெஜ்ரிவாலின் காவல் முடிவடைந்ததை தொடர்ந்து இன்று மீண்டும் அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.
மேலும் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் காவலை 7 நாட்கள் நீட்டிக்க கோரி அமலாக்கத்துறை அதிகாரிகள் மனு தாக்கல் செய்தனர்.
இந்த வழக்கை விசாரித்த டெல்லி உயர் நீதிமன்றம் 4 நாட்கள் அரவிந்த் கெஜ்ரிவாலை காவலின் வைத்து விசாரணை நடந்த உத்தரவிட்டுள்ளது.
அதன்படி அரவிந்த் கெஜ்ரிவால் ஏப்ரல் 1 ஆம் தேதி வரை அமலாக்க துறையின் காவலில் இருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.
English Summary
Arvind kejriwal ed remand extends