பள்ளி விடுதியில் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் அடி, உதை.. மரணித்த மாணவர்.!
anthra student killed by friends in school hostel
ஆந்திர மாநிலத்தில் உள்ள கடப்பா மாவட்டத்தில் ரயில்வே கோடூர் பகுதியில் ஹரி நாராயணா என்பவருக்கு 18 வயதில் நவ்தீப் என்ற மகன் இருந்துள்ளார். இவர் ரேணிகுண்டாவில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படித்து வந்துள்ளார்.
விடுதியில் தங்கி படித்து வந்த நிலையில் நேற்று முன்தினம் அவருடைய நண்பர் ஒருவருக்கு பிறந்தநாள் என்ற காரணத்தால் நள்ளிரவு நேரத்தில் கேக் வெட்டி கொண்டாடி இருக்கின்றனர். அப்போது நண்பர்களுக்கு இடையில் தகராறு ஏற்பட்டுள்ளது.
இதில் ஒருவரை ஒருவர் சரமாரியாக அடித்து உதைக்க ஆரம்பித்தனர். இதில் நவதிப்புக்கு பயங்கர காயம் ஏற்பட்டது. பின் நண்பர்கள் அவரை மீட்டு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அவருக்கு முதல் உதவி அளிக்கப்பட்டு சென்னையில் இருக்கும் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டது.
சிகிச்சை பலனின்றி நவதிப் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் குறித்து ரேணிகுண்டா காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து நவதிப்பின் நண்பர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விடுதியில் மாணவர் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது.
English Summary
anthra student killed by friends in school hostel