மீண்டும் அலறல் சத்தம்.!! பக்தர்கள் கண்ணில் சிக்கிய மேலும் ஒரு சிறுத்தை.!!. தேடுதல் வேட்டை தீவிரம்.!! - Seithipunal
Seithipunal


கடந்த ஆகஸ்ட் 11ம் தேதி இரவு 10 மணியளவில் ஆந்திர மாநிலம் நெல்லூர் மாவட்டம் பாத்திரெட்டி பாளையத்தைச் சேர்ந்த லட்சிதா என்ற சிறுமி சிறுத்தையால் தாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்திய நிலையில் திருப்பதி தேவஸ்தாம் திருமலை நடைபாதையில் 500 சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு வனவிலங்கு தாக்குதல் சம்பவம் மீண்டும் நடைபெறாமல் இருக்க பலகட்ட நடவடிக்கைகள் எடுக்கும்.

திருமலை நடைபாதையில் ஒவ்வொரு 40 அடிக்கும் பாதுகாப்பு நடவடிக்கை எடுக்கப்படும்' என தெரிவித்து இருந்தது. இந்த நிலையில் சிறுமியைக் கொன்ற சிறுத்தையை பிடிக்க வனத்துறை தீவிர தேடுதல் வேட்டை மேற்கொண்டனர். மேலும் சிறுத்தை பிடிக்க வனத்துறை சார்பில் பிடிக்க 2 இடங்களில் கூண்டு அமைக்கப்பட்டு 30 இடங்களில் நைட் விஷன் கேமராக்களும் பொருத்தி கண்காணித்தனர்.

இந்நிலையில் சிறுமியைக் கொன்ற சிறுத்தை வனத்துறை சார்பில் வைக்கப்பட்டிருந்த கூண்டில் இன்று அதிகாலை சிக்கியது. பிடிபட்ட சிறுத்தையை அடர்ந்த வனப்பகுதிக்குக் கொண்டு சென்று விட வனத்துறை அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் திருமலைக்கு நடைபாதை வழியாக செல்ல 15 வயது உட்பட்டவர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் திருப்பதி நடைபாதை அருகே மேலும் ஒரு சிறுத்தை நடமாட்டம் இருந்த சம்பவம் பக்தர்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. இன்று மலைப் பாதையில் பக்தர்கள் சென்று கொண்டிருந்த போது பக்தர்கள் மற்றொரு சிறுத்தையின் நடமாட்டத்தை கண்டு அலறியுள்ளனர். இதனால் சிறுத்தை அங்கிருந்து தப்பி காட்டிற்குள் ஓடிச் சென்று மறைந்தது. இதனால் மலைப்பாதையில் மீண்டும் பதற்றமான சூழல் நிலவி வருகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Another leopard on the move in Tirupati hills path


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->