காலையிலேயே அரங்கேறிய கோர விபத்து.. பரிதாபமாக பலியான உயிர்கள்.!!
Andra Pradesh Jalantrakota Accident 3 Passed away 3 Injuires
ஆந்திர பிரதேசம் மாநிலத்தில் உள்ள ஸ்ரீகாகுளம் மாவட்டம் ஜலந்தரக்கோட்டாவில் தேசிய நெடுஞ்சாலை இருக்கிறது. இந்த நெடுஞ்சாலையில் கார் மற்றும் லாரி பயணம் செய்து கொண்டு இருந்தது.
இன்று அதிகாலை கார் அதிவேகத்தில் லாரிக்கு பின்னால் சென்ற நிலையில், முன்னால் சென்று கொண்டு இருந்த லாரி திடீரென பிரேக் போட்டுள்ளது. இதனை சற்றும் எதிர்பாராத கார், லாரியின் பின்புறம் மோதியுள்ளது.
விபத்தை அறிந்த ஓட்டுநர் வாகனத்தை நிறுத்திய நிலையில், இந்த விபத்து குறித்து காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. தகவலை அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர் மீட்பு பணிகளை மேற்கொண்டனர்.
இந்த விபத்தில் காரில் பயணம் செய்தவர்களில் 3 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியாகியுள்ளனர். மேலும், 3 பேர் காயத்துடன் உயிருக்கு அலறித்துடித்தனர். இவர்களை மீட்டு அங்குள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இந்த விபத்து அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மேலும், விபத்தில் சிக்கியவர்கள் யார்? எங்கிருந்து வந்தவர்கள்? என்று சென்றார்கள் என்பது தொடர்பான விசாரணையும் நடைபெற்று வருகிறது.
Tamil online news Today News in Tamil
English Summary
Andra Pradesh Jalantrakota Accident 3 Passed away 3 Injuires