புல் புதரில் தனிமை! காதலன் கண்முன்னே காதலிக்கு நேர்ந்த கொடூரம்!  - Seithipunal
Seithipunal


ஆந்திர மாநிலம், ஸ்ரீஹரிகோட்டா அருகே தனிமையில் சந்தித்த காதலர்களை மிரட்டி, காதலனை கட்டிப்போட்டு, காதலியை பலாத்காரம் செய்த கொடூரம் அரங்கேறியுள்ளது. 

ஆந்திர மாநிலம், ஸ்ரீஹரிகோட்டா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியை சேர்ந்த 20 வயது இளம்பெண் ஒருவர் அதே பகுதியை சேர்ந்த ஒரு இளைஞரை காதலித்து வந்துள்ளார்.

சம்பவம் நடந்த அன்று அந்த இளம் பெண்ணுக்கு பிறந்த நாள் என்பதால், காதலன் உடன் அருகே உள்ள கோவிலுக்கு சென்றுள்ளார்.

பின்னர் பிலிகாட் ஏரி பகுதியில் மறைவான புல் புதர் பகுதியில் காதலர்கள் இருவரும் தனிமையில் பேசி இருந்ததாக தெரிகிறது.

அப்போது அங்கு மது போதையில் வந்த இரண்டு இளைஞர்கள், காதலனை கடுமையாக தாக்கி, கை-கால்களை கட்டி போட்டு, காதலன் முன்பே இளம் பெண்ணை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். 

மக்கள் நடமாட்டத்திற்கு தூரமான தனிமை பகுதி என்பதால் இவர்களின் அபாய குரல் கேட்டு யாரும் உதவிக்கு வர முடியாத நிலைக்கு தள்ளப்பட்டனர்.

பின்னர் மது போதை இளைஞர்கள் இருவரும் அங்கிருந்து தப்பி செல்ல, சற்று தடுமாறிய இளம்பெண் ஸ்ரீஹரி கோட்டா காவல் நிலையத்தில் சம்பவம் குறித்து புகார் அளித்தார்.

புகார் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார், சிசிடிவி காட்சிகள் மற்றும் பொது மக்களின் உதவியுடன் இளம்பெண்ணை பலாத்காரம் செய்த அந்த இரண்டு இளைஞர்களையும் அதிரடியாக கைது செய்து, அவர்களிடம் சிறப்பு விசாரணையில் ஈடுபட்டு வருகின்றன.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Andhra Young Woman Molested Police Investigation 


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?




Seithipunal
--> -->