புதிதாக உருவாக்கப்பட்ட மாவட்டத்துக்கு அம்பேத்கர் பெயர் சூட்ட ஆந்திர அரசு முடிவு செய்துள்ளதாக தகவல்.!
Andhra Pradesh new district name change
புதிதாக உருவாக்கப்பட்ட கோனாசீமா மாவட்டத்துக்கு அம்பேத்கார் பெயர் சூட்ட ஆந்திர மாநில அரசு முடிவு செய்துள்ளது என்று தகவல் வெளியாகியுள்ளன.
ஆந்திர மாநிலத்தில் கடந்த ஏப்ரல் மாதம் 4ஆம் தேதி அமலாபுரம் தலைநகரமாக கொண்டு கோனாசீமா மாவட்டம் புதிதாக உருவாக்கப்பட்டது. இதனால் ஆந்திர மாநிலத்தில் உள்ள மொத்த மாவட்டங்களின் எண்ணிக்கை 26 ஆக உயர்ந்துள்ளது.
இந்நிலையில் கோனாசீமா மாவட்டத்திற்கு அம்பேத்கர் பெயரை சூட்ட வேண்டும் என்று தலித் குழுக்கள் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் உட்பட பல்வேறு தரப்பினர் அம்மாநில அரசுக்கு கோரிக்கை விடுத்திருந்தனர்.
இதைத்தொடர்ந்து இந்த கோரிக்கையை நிறைவேற்ற வலியுறுத்தி சில அமைப்புகள் போராட்டங்களையும் நடத்திய நிலையில் கோனாசீமா மாவட்டத்துக்கு அம்பேத்கர் பெயரை சூட்ட ஆந்திர அரசு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
இதுதொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
English Summary
Andhra Pradesh new district name change