''இதை செய்தால் அரசியலை விட்டு விலகுவேன்'' - ரோஜா பரபரப்பு பேட்டி! - Seithipunal
Seithipunal


ஆந்திர மாநில காங்கிரஸ் தலைவரான ஷர்மிளா, நகரி சுற்றுப்பயணம் மேற்கொண்ட போது அமைச்சர் ரோஜா மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை தெரிவித்து ரோஜாவை ஊழல் ராணி என விமர்சித்தார். 

இது குறித்து மந்திரி ரோஜா அளித்த பேட்டியில் தெரிவித்திருப்பதாவது, தேர்தல் நெருங்கி வரும் சமயத்தில் காங்கிரஸ், தெலுங்கு தேசம் ஜனசேனா கட்சிகள் ஒரே பக்கமாக சாய்ந்துள்ளது. 

ஷர்மிளா தன் மீது தெரிவித்த குற்றச்சாட்டுகளை நிரூபித்தால் நான் அரசியலை விட்டு விலகுகிறேன். ஓய்.எஸ். ராஜசேகர் ரெட்டி மறைவிற்கு பிறகு முதல் மந்திரி ஜெகன்மோகன் ரெட்டி மக்களின் மனதில் அவரது பெயரை நிலை நிறுத்த பல்வேறு சேவைகளை மேற்கொண்டு வருகிறார். 

தந்தையின் பெயரைக் கெடுப்பதற்காக ஷர்மிளா செயல்பட்டு வருகிறார். ஒய்.எஸ்.ஆர் மறைவிற்குப் பின்னர் ஜெகன்மோகன் ரெட்டியை 16 மாதங்கள் சிறையில் அடைத்த காங்கிரஸ் கட்சியின் ஒரு அங்கமாக ஷர்மிளா திகழ்கிறார் என தெரிவித்துள்ளார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Andhra minister roja speech


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->