துண்டுதுண்டாக கண்டெடுக்கப்பட்ட எலும்பு கூடு.! விசாரணை பின்னணியில் திடுக்கிடும் உண்மைகள்.!
An younger found by police in Kerala
24 நாட்களுக்கு முன்பு கேரளாவில் காணாமல்போன இளைஞரின் எலும்புத் துண்டுகள் போலீசாரால் கண்டெடுக்கப்பட்டுள்ளது. அந்த இளைஞர் விஷ்ணு ஹரிதாஸ் என்று அடையாளம் காணப்பட்டுள்ளார்.
கேரளாவில் இருக்கும் வைக்கோமில் அவர் வசித்து வந்துள்ளார். கடந்த ஜூன் இரண்டாம் தேதி ஹரிதாஸ் காணாமல்போய் இருக்கின்றார். அவர் காணாமல் போன தேதியிலிருந்து 24 நாட்களுக்கு பிறகு அவரது உடல் எலும்பு துண்டுகளுடன் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
ஆள் நடமாட்டம் இல்லாத ஒரு பகுதியில் சுத்தம் செய்ய வந்த தொழிலாளர்கள் அங்கு ஒரு சட்டை தொங்கிக் கொண்டிருப்பதாக தெரிவித்துள்ளனர். பின்னர் அங்கே எலும்புக்கூடுகள் கிடப்பதை கண்டு அவர்கள் அதிர்ச்சி அடைந்து உடனடியாக காவல்துறைக்கு தகவல் தெரிவித்து உள்ளனர்.
தகவலறிந்த காவல்துறையினர் உடனடியாக விரைந்து வந்து 2 செல்போன்கள் மற்றும் செருப்புகள் உள்ளிட்டவற்றை கண்டுபிடித்துள்ளனர். மேலும், அவர் அணிந்திருந்த செயின் மற்றும் பையை காணவில்லை. அவர் வேலை பார்த்த இடத்தில் இருந்து 30 கிலோமீட்டர் தொலைவில் அவருடைய உடல் கண்டறியப்பட்டுள்ளது.
விசாரணையில் அவருக்கு ஒரு செல்போன் அழைப்பு வந்ததாகவும் அதனை தொடர்ந்து அவர் அந்த இடத்திற்கு விரைந்ததாகவும் கூறப்படுகிறது. இது குறித்து காவல்துறையினர் தொடர்ந்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
English Summary
An younger found by police in Kerala