மெல்போர்னில் திடீரென தரையிறக்கப்பட்ட ஏர் இந்தியா விமானம் - நடந்தது என்ன? - Seithipunal
Seithipunal


மெல்போர்னில் திடீரென தரையிறக்கப்பட்ட ஏர் இந்தியா விமானம் - நடந்தது என்ன?

ஏர் இந்தியா ஏஐ309 போயிங் விமானம் பயணிகளுடன் தலைநகர் டெல்லிக்கு புறப்பட்டுச் சென்றது. இதையடுத்து இந்த விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்த போது விமானத்தில் பயணி ஒருவருக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது.

இதையறிந்த விமானி சம்பவம் குறித்து கட்டுப்பட்டு அறைக்குத் தகவல் தெரிவித்தார். அதன் படி அதிகாரிகள் விமானத்தை மெல்போர்னில் தரையிறக்குமாறு தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து விமானம் மெல்போர்னுக்கு அவசரமாக தரையிறக்கப்பட்டது. 

உடனே விமானத்தில் இருந்து இறக்கப்பட்ட உடல்நிலை சரியில்லாத பயணி அங்குத் தயார் நிலையில் இருந்த ஆம்புலன்ஸில் ஏற்றப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டார். அதன் பின்னர் விமானம் மீண்டும் அங்கிருந்து புறப்பட்டது. 

இது தொடர்பாக விமான நிறுவன அதிகாரி ஒருவர் தெரிவித்ததாவது:- "டெல்லிக்கு பயணிம் செய்த ஏர் இந்தியா விமானம் நேற்று காலை ஒரு மணி நேரத்திற்கும் மேலாக வான்வழியில் பயணித்த நிலையில் மருத்துவ அவசரநிலை காரணமாக மெல்போர்னுக்கு திரும்பியது என்றுத் தெரிவித்தார். 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

air india flight emergency landing in melbourne


கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->