#BREAKING : மத்திய பிரதேசத்தில் விமானப்படை விமானங்கள் நேருக்கு நேர் மோதி விபத்து..!! - Seithipunal
Seithipunal


மத்திய பிரதேச மாநிலம் மொரீனா அருகே இந்திய விமானம் படைக்க சொந்தமான சுகோய்-30 மற்றும் மிராஜ் 2000 ரக பயிற்சி விமானங்கள் ஒன்றுடன் ஒன்று நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த மீட்பு குழுவினர் தேடுதல் மற்றும் மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மத்திய பிரதேசத்தில் உள்ள குவாலியர் விமான தளத்தில் இருந்து இரண்டு விமானங்களும் ஒரு பயிற்சி நடந்து கொண்டிருந்தன.

அப்பொழுது எதிர்பாராத விதமாக இரு விமானங்களும் உன்னுடன் ஒன்று மோதி யோகத்தில் சிக்கியது. இந்த விமான விபத்தின் போது மிராஜ் 2000 இல் ஒரு பைலட் இருந்ததாகவும், சுகோய்-30ல் 2 விமானிகள் இருந்ததாகவும் தகவல் வெளியாகி உள்ளது. சுகாய்-30ல் பயணித்த 2 விமானிகள் பாதுகாப்பாக இருப்பதாக முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. மிராஜ் 2000 இல் பயணித்த பைலட் பற்றி தகவல் இன்னும் வெளியாகவில்லை. பயிற்சி போது இரு விமானங்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட சம்பவம் மத்திய பிரதேசத்தில் பெரும் பரபரப்பை உண்டாக்கியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Air force planes crash in Madhya Pradesh


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->