திருமணம் செய்வதாக கூறி அமெரிக்க மூதாட்டி பலாத்காரம்... ஆக்ரா வாலிபர் சிறையில் அடைப்பு...! - Seithipunal
Seithipunal


உத்திரபிரதேசம் மாநிலம் ஆக்ராவை சேர்ந்தவர் ககன்தீப்(32). இவர் தங்கும் விடுதி நடத்தி வருகிறார். இந்நிலையில் கடந்த 2017 ஆம் ஆண்டு, இந்தியாவுக்கு சுற்றுலா வந்த அமெரிக்காவைச் சேர்ந்த 62 வயதுப் பெண், விடுதியில் சில நாட்கள் தங்கியுள்ளார். அப்பொழுது இவர்களிடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து ககன்தீப், திருமணம் செய்து கொள்வதாக கூறி அமெரிக்காவைச் சேர்ந்த 62 வயது பெண்ணை பலமுறை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.

இந்நிலையில், சுற்றுலா முடிந்து அமெரிக்காவுக்கு சென்ற பெண், மீண்டும் இந்தியாவுக்கு வந்து திருமணம் குறித்து ககன்தீப்யிடம் பேசியுள்ளார். ஆனால் ககன்தீப் திருமணம் செய்து கொள்ள மறுத்ததால், அமெரிக்கா பெண் இதுகுறித்து விவேக் விஹார் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.

இந்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட போலீசார் ககன்தீப்பை கைது செய்தனர். பின்பு போலீசார் டெல்லி நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி ககன்தீப்பை சிறையில் அடைத்தனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Agra Young man arrested for raping America Oldman


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->