அக்னிபாத் திட்டத்திற்கு எதிராக வலுக்கும் போராட்டம்.. 612 ரயில்கள் ரத்து.!! - Seithipunal
Seithipunal


ராணுவத்தில் நான்கு ஆண்டுகள் ஒப்பந்தம் அடிப்படையில் இளைஞர்களை சேர்க்கும் திட்டத்தை மத்திய அரசு அறிவித்துள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் போராட்டமும், வன்முறையும் நடைபெற்று வருகிறது. இந்தப் போராட்டங்களின் தொடர்ச்சியாக நாடு தழுவிய முழு அடைப்புக்கு பல்வேறு அமைப்புகள் சமூக வலைதளங்கள் மூலம் அழைப்பு விடுத்துள்ளனர். 

இருந்தபோதிலும், இந்த போராட்டத்திற்கு பிரதான எதிர்க் கட்சிகள் எதுவும் முறைப்படி ஆதரவு அளிக்காததால், ஒரு சில பகுதிகளைத் தவிர நாட்டின் பெரும்பாலான மாநிலங்களில் இந்த போராட்டத்தால் பாதிப்பு இல்லை. அக்னிபத் திட்டத்துக்கு எதிராக கடந்த வாரம் நடந்த போராட்டம் மற்றும்  வன்முறை சம்பவங்களில் ஏராளமான ரயில்கள் எரிக்கப்பட்டதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பல்வேறு பால்நிலங்களில் ரயில்கள் ரத்து செய்யப்பட்டது. 

குறிப்பாக பீகாரில் பல்வேறு ரயில்கள் ரத்து செய்யப்பட்டது. ஒட்டுமொத்தமாக நாட்டில் பல்வேறு மாநிலங்களில் 612 ரயில்கள் ரத்து செய்யப்பட்டிருந்தன. இதில் 223 ரயில்கள் எக்ஸ்பிரஸ் ரயில்கள். இதைத் தவிர மேலும் பல ரயில்கள் மாற்றுப்பாதையில் இயக்கியும்,  நடவடிக்கை எடுக்கப்பட்டது. 

இதனால், ரயில் பயணிகள் மிகுந்த பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். பல்வேறு ரயில்கள் ரத்து செய்யப்பட்டதால் பல ரயில் பயணிகள் நீண்ட நேரம் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

agnipath protest 612 trains cancelled


கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->