டிராக்டர் மீது லாரி மோதி கோர விபத்து.. 5 பேர் பரிதாப பலி... 17 பேர் படுகாயம்...! - Seithipunal
Seithipunal


லாரி டிராக்டர் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 5 பேர் பரிதாபமாக பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சத்தீஸ்கர் மாநிலம் காசியாபாத் மாவட்டத்தில் உள்ள நெடுஞ்சாலையில் டிராக்டர் ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது எதிர்பாராதவிதமாக எதிரே வந்த லாரி ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து டிராக்டர் மீது நேருக்கு நேர் மோதியது.

 இதில் அந்த டிராக்டர் உடன் இணைக்கப்பட்டிருந்த வண்டியில் இருந்த ஐவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். தகவல் அறிந்து விரைந்து வந்த காவல்துறையினர் படுகாயமடைந்த 17 பேரை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் பிறந்தநாள் விழா கொண்டாட்டத்திற்கு சென்றுவிட்டு ஊருக்கு திரும்பும் பொழுது விபத்தில் நடந்ததாக தெரிகிறது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Accident In chhattisgarh


கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்



Advertisement

கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்




Seithipunal
--> -->