புதுச்சேரி || தடுப்புக்கட்டையில் இருசக்கர வாகன மோதி விபத்து - வாலிபர் பலி - Seithipunal
Seithipunal


புதுச்சேரியில் தடுப்புக்கட்டையில் இருசக்கர வாகனம் மோதிய விபத்தில் வாலிபர் உயிரிழந்துள்ளார்.

புதுச்சேரி ரெட்டியார் பாளையம் மரியாள் நகர் பகுதியை சேர்ந்த ராஜேந்திரன் என்பவரின் மகன் எலக்ட்ரிசியன் தமிழ் வேந்தன்(35). இவர் இருசக்கர வாகனத்தில் வில்லியனூர் அருகே உள்ள ராமநாதபுரத்திற்கு சென்று கொண்டிருந்தார்.

அப்பொழுது பத்துக்கண்ணு சிறிய பாலம் அருகே சென்ற போது திடீரென கட்டுப்பாட்டை இழந்த இருசக்கர வாகனம் தண்ணீர் வாய்க்கால் தடுப்பு கடையில் மோதி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் பலத்த காயமடைந்த தமிழ் வேந்தனை அப்பகுதியில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி தமிழ் வேந்தன் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதையடுத்து இந்த விபத்து குறித்து புதுவை போக்குவரத்து காவல்துறையினர், வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

A twowheeler collided with a barricade in Puducherry


கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->