உ.பி-யில் அதிர்ச்சி.! நண்பனின் இறுதிச்சடங்கு... தீயில் குதித்து உயிரை மாய்த்துக்கொண்ட உயிர்த்தோழன்..! - Seithipunal
Seithipunal


உத்தரபிரதேச மாநிலம் நாக்லா கங்கர் காவல் நிலையப் பகுதியைச் சேர்ந்தவர் அசோக் (42). இவர் நேற்று காலை புற்றுநோயால் உயிரிழந்தார். இதையடுத்து இவரது இறுதி சடங்குகள் காலை 11 மணியளவில் யமுனை கரையில் நடைபெற்றது. அப்பொழுது அசோக்கின் சிதைக்கு தீமூட்டி விட்டு அங்கிருந்து அனைவரும் சென்றனர்.

அப்பொழுது அங்கிருந்த அசோக்கின் உயிர் நண்பனான ஆனந்த் என்பவர், திடீரென எரிந்து கொண்டிருந்த சிதை மீது விழுந்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த அங்கிருந்தவர்கள், உடனடியாக ஆனந்தை மீட்டு சிகிச்சைக்காக மாவட்ட மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

பின்பு அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக ஆக்ராவில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட ஆனந்த், மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

A person who committed suicide at a friend funeral in uttar pradesh


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->