காணாமல் போன தாய்.. தவித்த மகன்.. டிரம்மில் கண்ட கோரக்காட்சி.!
A men killed his ex wife
தன்னுடைய முன்னாள் மனைவியை ஒரு கணவன் கொடுமையாக கொலை செய்து ஒரு புதருக்குள் பிணத்தை வீசி சென்ற சம்பவம் பரபரப்பை உண்டாக்கியுள்ளது.
மும்பை தானே பகுதியில் வசித்து வரும் அம்புஜ் திவாரி என்பவர் தனது முன்னாள் மனைவியான நீலம் எனும் பெண்ணை ஸ்ரீகாந்த் என்ற நண்பருடன் சேர்ந்து கொலை செய்து மும்பை-புனே சாலையில் பிளாஸ்டிக் டிரம் ஒன்றில் அடைத்து வீசிவிட்டு சென்றுள்ளனர்.
சில நாட்களாகவே தனது தாயை காணாமல் தவித்த அவருடைய மகன் மற்றும் மருமகள் இருவரும் சேர்ந்து கடந்த ஜூலை 23 ஆம் தேதி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். காவல்துறை மேற்கொண்ட விசாரணையின் பேரில் இந்த சம்பவமானது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
பின்னர் கொலையாளியிடம் விசாரித்ததில் தனது இல்லத்தில் வைத்தே கழுத்தை நெரித்து கொலை செய்ததாக அவர் ஒப்புக்கொண்டார். இதனைத்தொடர்ந்து சடலம் மீட்டெடுக்கப்பட்டது. மேலும் அந்த உடலை கொண்டு செல்ல உதவிய டெம்போ பறிமுதல் செய்யப்பட்டது.
கொலையில் சம்பந்தப்பட்டவர்கள் மீது பல பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகின்றது