கத்தி முனையில் 15 வயது சிறுமிக்கு.. 8 பேர் சேர்ந்து கூட்டு பாலியல் வன்கொடுமை.!! அதிரும் தெலுங்கானா.!! - Seithipunal
Seithipunal


தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் புறநகர் பகுதியில் 8 பேர் கொண்ட கும்பல் 15 வயது சிறுமியை கத்திமுனையில் மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தால் பாதிக்கப்பட்ட சிறுமியும் அவரது 14 வயது சகோதரரும் பெற்றோரை இழந்த நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு மீர்பேட்டில் உள்ள உறவினர் வீட்டிற்கு குடியேறியுள்ளனர்.

இந்த சம்பவம் நடைபெற்ற போது அவர்கள் இருவரும் பக்கத்துவீட்டு குழந்தைகளுடன் வீட்டினுள் இருந்துள்ளனர். அப்போது 8 பேர் கொண்ட கும்பல் வீட்டிற்குள் நுழைந்து கத்தியைக் காட்டி மற்ற சிறார்களை மிரட்டி சிறுமியை மாடிக்கு தூக்கி சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளது. 

இந்த கொடூர சம்பவத்தால் பரவ மீர்பேட் மேயர் பாரிஜாத ரெட்டி வீட்டை மக்களும், காங்கிரஸ் தொண்டர்களும் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இதனால் மேயர் வீடு சுற்றிலும் போலீஸ் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.

ரச்சகொண்டா காவல் ஆணையர் சம்பவ இடத்தை நேரில் பார்வையிட்டதோடு விசாரணை மேற்கொண்டார். இந்த சம்பவம் குறித்து கூட்டு பாலியல் வன்கொடுமை மற்றும் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் குற்றவாளிகளைக் கண்டுபிடிக்க 7 தனிப்படைகளை அமைத்து தீவிரமாக தேடி வருகின்றனர்.

பாலியல் வன்கொடுமைக்கு ஆளான சிறுமியை மருத்துவப் பரிசோதனைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் அச்சிறுமியிடம் போலீசார் வாக்குமூலம் பெற்றுள்ளனர். மேலும் அப்பகுதியில் அமைந்துள்ள சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் குற்றவாளிகளைத் தேடி வருவதாகவும் தெலுங்கானாபோலீஸார் தெரிவித்தனர்.

கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளான சிறுமியின் குடும்பத்தினருக்கும் குற்றவாளிகளுக்கு முன் விரோதம் இருந்ததா என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 15 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ள சம்பவம் தெலுங்கானாவில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

A 15year old girl was gang raped by 8 persons in Telangana


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->