#மகாராஷ்ட்ரா || தொழிற்சாலை வெடி விபத்தில் 9 பேர் பலி.!!
9 killed in factory explosion in Maharashtra
மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூர் அருகே வெடிபொருட்கள் தயாரிக்கும் நிறுவனத்தில் ஏற்பட்ட பயங்கர வெடிவிபத்தில் சிக்கி 9 பேர் உயிரிழந்ததாக முதற்கட்ட தகவல் வெளியாகி உள்ளது.
சோலார் இண்டஸ்ட்ரிஸ் என்ற தொழிற்சாலையில் இந்த வெடி விபத்தானது நடைபெற்று உள்ளது. வெடிபொருட்கள் பேக்கிங் செய்யும் போது ஏற்பட்ட உராய்வின் காரணமாக இந்த வெடிவிபத்து ஏற்பட்டிருக்க கூடும் என தெரிய வந்துள்ளது. மேலும் உயிரிழப்பு அதிகரிக்க கூடும் எனவும் அஞ்சப்படுகிறது.
சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்பு படையினர் வெறிவிப்புத்தில் சிக்கியவர்களை மீட்பு பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். மகாராஷ்டிரா போலீசார் இந்த வெடிவிபத்து சம்பவம் தொடர்பாக தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
English Summary
9 killed in factory explosion in Maharashtra