மத நிகழ்ச்சியில் பிரசாதம் சாப்பிட்ட 80 பேருக்கு உடல்நிலைக் குறைவு.. 6 பேர் கவலைக்கிடம்.! - Seithipunal
Seithipunal


அசாம் மாநிலத்தில் மத நிகழ்ச்சியில் பிரசாதம் சாப்பிட்ட 80 பேருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது.

அசாம் மாநிலம் தேமாஜி மாவட்டத்தில் உள்ள தேகாபம் அப்மனோலா கிராமத்தில் மத நிகழ்ச்சி ஒன்று  நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கிராம மக்கள் பலர் கலந்து கொண்டனர். அப்போதே அங்கு பக்தர்களுக்கு பிரசாதமாக கருப்பு கொண்டைக்கடலை மற்றும் பச்சை பயிறு வழங்கப்பட்டது.‌ 

இந்த பிரசாத்தை சாப்பிட்ட உடனே அவர்களில் பலருக்கு வாந்தி மற்றும் வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து அங்கு நிறைந்த மருத்துவ மற்றும் செவிலியர்கள் குழு முதலுதவி சிகிச்சை அளித்தனர்.

இதில், பிரசாதத்தை சாப்பிட்ட குழந்தைகள் பெண்கள் உட்பட 80 பேருக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில், 6 பேர் மிகவும் கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

80 peoples affected for ate prasadham in Assam


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->