#ஆந்திரா | லாரி மீது கார் மோதி பயங்கர விபத்து - ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் பலி - Seithipunal
Seithipunal


ஆந்திராவில் லாரி மீது கார் மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் உயிரிழந்துள்ளனர்.

ஆந்திர பிரதேச மாநிலம் விஜயவாடாவில் இருந்து ராஜமகேந்திராவரம் நோக்கி கார் ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்பொழுது இன்று அதிகாலை கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள நல்லச்சார்லா கிராமத்தில் கார் சென்றபோது எதிர்பாராத விதமாக திடீரென நெடுஞ்சாலையை விட்டு விலகி சாலையோரம் நின்றிருந்த லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது.

இந்த பயங்கர விபத்தில் காரில் பயணம் செய்த ஆறு பேர் உயிரிழந்துள்ளனர். இதையடுத்து இந்த விபத்து குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார், உயிரிழந்தவர்களின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் உயிரிழந்தவர்கள் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் என்றும், இதில் இரண்டு பெண்களும், ஒரு குழந்தையும் அடங்குவர் என்று போலீசார் தெரிவித்துள்ளனர். இதைத்தொடர்ந்து போலீசார் இந்த விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

6 of family killed in car lorry collision in andhra


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->